விவசாயிகள் போராட்டம் நாட்டின் கெளரவம் சம்பந்தப்பட்டது! மிக முக்கியமாக உலக வர்த்தக நிறுவனத்துடனான இந்தியாவின் அடிமை சாசனத்தை தூக்கி எறிய வேண்டும், கார்ப்பரேட்களின் கள்ள உறவால் கொண்டு வரப்பட்ட நில அபகரிப்பு சட்டம், மின்சார சட்டங்களை ரத்து செய்வது போன்றவை சம்பந்தப்பட்டதாகும்; விவசாயிகளின் கோரிக்கைகள் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துதல், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுதல் மற்றும் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியது. பாஜக அரசு பலத்த ...
நிலத்தடி நீர் பாசனமே அற்றுப் போகும்.. ஏரி, குளம், குட்டை, கிணறுகளுக்கு நீர் கிடைக்காது. பயிர்கள் அழியும், பறவைகள் மடியும்! குடி நீர் பஞ்சம் ஏற்படும் கொங்கு மண்டலமே பாலைவனமாகும் பல்லுயிர் பெருக்கமே சிதையும். சுற்றுச் சூழலே சூனியமாகும்..! இவையெல்லாம் கீழ்பவானி கால்வாயை பலப்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிகழும் அசம்பாவிதங்கள்! ஆகவே, நாங்கள் இதை செயல்படுத்த அனுமதிக்கமட்டோம்’ என கொங்கு மண்டலமே போர்க்கோளம் பூண்டது போல உண்ணாவிதங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுக் கொண்டுள்ளன! இவ்வளவு பயத்தை ஏற்படுத்தி இருக்கும் ...
‘வேளாண்மைக்கான தனி பட்ஜெட் போட வேண்டிய தேவை என்பதே வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களின் நிர்பந்தத்தின் விளைவே’ என இந்த பட்ஜெட்களே துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுகின்றன! பட்ஜெட்டின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு திட்டமும் வேளாண் துறையின் பெரு நிறுவனங்களை கருத்தில் கொண்டே உள்ளன..! தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கான தனித்த பட்ஜெட் வெளியிடுவதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள்! அதிலும், திமுக ஆட்சி தான் இதை அறிமுகப்படுத்தியது என்பதும், வேளாண்மைக்கென தனியாக 42,281.88 கோடிகள் ஒதுக்கி பட்ஜெட் போட்டுள்ளது விவசாயிகளின் மீதான அக்கறையைக் காட்டுவதாகவும் பரவலாக ...
ஏதோ பகை நாட்டு எதிரிகளை எதிர்கொள்வது போல விவசாயிகளின் போராட்டத்தை எதிர் கொண்டுள்ளது மத்திய பாஜக அரசு! இரும்புத் தடுப்புகள், துணை இராணுவப் படைகள்! மூன்று மாநில காவல்துறையினர்..எதுவும் பலிக்கவில்லையே! எல்லாவற்றையும் முறியடித்து, வீரா ஆவேசமாக விவசாயிகள் களத்தில் நிற்கின்றனர்; இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்சாபிலிருந்தும், உபியில் இருந்தும், ஹரியானாவில் இருந்தும் விவசாயிகள் தங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணியை தொடங்கினர். விவசாய சங்கங்களின் கொடிகளை ஏந்தியபடி டிராக்டர் மற்றும் தள்ளு வண்டிகளில், ஆறு மாதத்திற்கான உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், ...
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! இது விவசாய இயக்கங்கள், சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆகிய அனைத்தையும் அணிதிரட்டி விட்டது! செய்யாறு மேல்மா விவசாயிகளுக்காக தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன! இது நாள் வரை பாஜகவை மட்டுமே பகையாக பார்த்த மக்கள், தற்போது திமுகவையும் பார்க்கின்றனர்! முப்போகம் விளையும் பசுமை பூமியை விவசாயிகளிடம் இருந்து பறிக்கும் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி ஏழை, எளிய குடிகள் 124 நாட்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பெரிதாக எந்த ...
அதிவேகமெடுக்கும் தொழில் மயம், நகர்மயம்! அதற்காக விழுங்கப்படும் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள்! வீழ்த்தப்படும் விவசாயம், அழிக்கப்படும் நீராதாரங்கள்..! அகதிகளாக்கப்படும் விவசாயிகள்..! முன் எப்போதும் இல்லாத வகையில் அழிவுப் பாதையில் பயணிக்கும் தமிழகம் குறித்த துல்லியமான அதிர்ச்சி ரிப்போர்ட்! திமுக அரசு பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாக பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர் கெலமங்களம்.. என ஒவ்வொரு நாளும் நிலப் பறிப்பு என்பது நாளும், பொழுதுமாக அரங்கேறி வருகிறது. ...
திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் இரண்டு டஜனுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் பல்லாயிரம் ஏக்கர்களில் விவசாய நிலப் பறிப்புகள் நடந்துள்ளன! நாளும், பொழுதுமாக விவசாய நிலங்களை பறித்த வண்ணமுள்ள தமிழக அரசின் உண்மையான நோக்கம் என்ன..? விவசாயிகள் மீதான குண்டர் சட்ட வாபஸிலும் ஒரு நாடகமா? “விவசாயிகள் மீது போட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டோம்” என்கிறார் முதல்வர்! ஆனால், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விவசாயிகள் ஜாமின் மனுவையே நிராகரிக்க சொல்லி அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோர்ட்டில், “குண்டர் சட்டம் விவசாயிகள் மீது ரத்து என ...
செய்யாறு மேல்மா பகுதியில் வளம் கொழிக்கும் 3,200 ஏக்கர் விவசாய நிலத்தில் தமிழக அரசு சிப்காட் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து 107 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று சென்னைக்கு வந்து ஆக்ரோஷமாக போராடினர்…! அரசு தற்கொலைக்கு தூண்டுவதாக கொந்தளிப்பு; முப்போக நிலத்தை எடுத்து மூர்க்கமாக சிப்காட் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து, பகுதி மக்கள் ”விவசாய நிலத்தை ஏன் அழிக்கிறீர்கள். எங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் இந்த நிலத்தை நம்பியே உள்ளது” என்று அரசுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் செய்து வருகிறார்கள். 107 நாட்கள் ...
பொய்களையே மெய்யாக்கி, அயோக்கியர்களையே புனிதர்களாக்கி, மக்களை எப்போதுமே மாயையில் ஆழ்த்தி பழக்கப்பட்ட சமூகத்தில், இந்திய விவசாயத்தை இருட்டில் தள்ளிய, லட்சோப லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆளும் வர்க்கங்களால் கொண்டாடப்படலாம்! ஆனால், உண்மை இது தான்; உப்புக் கல்லை வைரமென்று சொன்னால் – அதை ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நீ கதறி என்ன? பதறி என்ன தோழா..? ஒன்னுமே நடக்கலை ரொம்ப நாளா? “தஞ்சையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி ...