ஜனநாயகத்தின் பெயரிலான வாக்கு முறை பற்றி கள ஆய்வு செய்து பல அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார் இளந்திருமாறன்! தஞ்சை தரணி தான் சொந்த ஊர்! ஆனால்,அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தமிழகத்தில் ஏதாவது. அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம்,சகாயம் ஐ.ஏ.எஸ்சின் மக்கள் பாதை இயக்கம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியவற்றிலும் தீவிரமாக பணியாற்றியவர்! தற்போதுள்ள  மோசடிகளை தவிர்க்கவும், வாக்களிக்க வரமுடியாதவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கத்தக்க வகையிலும் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார்! ஜனநாயகத்தை விட இன்னொரு ...

  இன்றைக்கு காலத்தின் தேவையாகிறார் காந்தி காந்தி அமைதி அறக்கட்டளை டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்வில் வழக்கறிஞரும்,சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் காந்தி எப்படி இன்றைய காலத்தின் தேவையாகிறார் என்பதை ஆழமாகவும்,அழகாகவும் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசாங்கமே மக்களைச் சுரண்டும் போது, மக்கள் பாரபட்சமாக நடத்தப்படும் போது,சட்டங்களை அரசே வளைக்க முற்படும் தருணங்களில் எப்படி மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என காந்தியின் கோணத்தில் பேசினார்! அதன் தமிழாக்கத்தை காந்தியவாதியும்,மருத்துவருமான ஜீவா தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஆற்றிய செயல்பாடுகளும்,உரைகளும் சமூக தளத்திலும், ...

தமிழகத்தில் அரசு பழங்குடிகளையும், காடுகளையும் கையாளும் முறை மிக மோசமாக உள்ளது. கல்வி,பொருளாதாரம்,சூழலியல் பாதுகாப்பு,அடிப்படைத் தேவைகளுக்கான ரேஷன் பொருள்கள் பெறுவது, ஓட்டுப் போடுவது என எல்லாவற்றிலும் தமிழக பழங்குடிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்கிறார் சிவ சுப்பிரமணியன். பழங்குடிகளே  காடுகளைப் பாதுகாக்க முடியும் வனத்துறை வேலைக்குக் கேரளா, கர்நாடகா அரசுகள் 60 சதவிகிதம் அந்த மாநில பழங்குடிகளையே  நியமனம் செய்கின்றன.. ஆனால்  தமிழ்நாடு  அந்த காடுகளை பற்றி அனுபவமே இல்லாத நபர்களை நியமிக்கிறார்கள்.   நகர்புரத்தில் இருப்பவருக்குக் காட்டிற்குள் வேலை கொடுக்கிறார்கள்.அவரால் காட்டிற்குள் என்ன வேலை செய்ய முடியும்? காடு,விலங்குகள் பற்றிய எந்த வித அனுபவமும் இல்லாத, ...

என்ன அப்படியொரு கோபமோ…, பாஜக அரசுக்கு தொழிலாளர்கள் மீது? புதுசா எந்த உரிமையும் அவர்கள் தொழிலாளர்களுக்குத் தர வேண்டாம்…ஆனா, இருக்குற உரிமைகளைக் கூட ஒவ்வொன்றாக காலி பண்றாங்க…கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம் புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களுக்கு தற்போது கிடைத்து வரும் அரைகுறை பாதுகாப்புகளையும் பறித்துவிடுகின்றன,. மேலும்,முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் விரிவாக்கப்பட்டும்  உள்ளன. இந்திய வேலைவாய்ப்பு கட்டமைப்பில், அமைப்புசார் வேலை வாய்ப்புகள் 10 விழுக்காடு தான் உள்ளன. இதுவரை ஒரளவு பாதுகாப்புடம் இருந்த அந்த தொழிலாளர்களையும் பாதுகாப்பற்ற தன்மைக்கு மாற்றுவதுடன், உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தக் கூடியதாக ...

குஷ்புவின் பொய்கள்…..ஒன்றா, இரண்டா? பொய்,புரட்டு,வேஷம்…இதுவே அரசியல்! பணம்,பதவி,அதிகாரம் இதுவே குறிக்கோள்…! இதுவே இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குஷ்பு நமக்கு தந்துள்ள செய்தியாகும்! ’’நாட்டுக்கு நன்மை செய்வதற்குத் தான் கட்சியில் சேர்ந்துள்ளேன்…’’ ’’எனக்கு ஐந்து நாட்கள் தான் சூட்டிங்…மற்ற இருபத்தி ஐந்து நாட்கள் என்னை ஏன் கூட்டத்திற்கு காங்கிரஸார் அழைக்கவில்லை…’’ ’’இருக்கும் வரை இருந்த இடத்திற்கு விசுவாசமாக இருந்தேன்…’’ ’’என்னைய அவங்க நடிகையா தான் பார்த்தாங்க…அரசியல்வாதியாகப் பார்க்கலை..இதுல இருந்தே அவங்க( காங்கிரஸ்) சிந்தனையை நீங்க புரிஞ்சிக்கலாம்…’’ ’’என் பேச்சைக் கேட்க, எனக்காக மக்கள் கூட்டம் கூடும்’’ ’’நான் பத்து வருஷமாக அரசியலில் இருக்கேன்…எங்கேயாவது என் கூட என் கணவரைப் பார்த்திருக்கிறீர்களா’’ ’’நான் ...

அடித்தட்டு மக்களின் கல்விக் கனவாக இது நாள் வரை திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலையை அடியோடு சிதைத்து, அதை வசதியானவர்கள் மட்டுமே படிக்க முடிந்த இடமாக்கும் சூழ்ச்சி கவலையளிக்கிறது! மத்திய பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் கல்வித்துறையை எளியோருக்கு எட்டாக்கனியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.தற்போது அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் நிதி உதவியைப் புறக்கணித்துவிட்டு, கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மாணவர்களிடையே வசூலிப்பதன்  மூலமாக நிர்வகித்துக் கொள்ளலாம் என அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா ...

இயற்கை வேளாண் விஞ்ஞானி, சூழலியல் போராளி, இயற்கை விவசாயத்தில் 30 ஆண்டுகால முன்னோடி,இயற்கை விவசாயப் பயிற்சியாளர்,எழுத்தாளர்,இதழாளர்.. என பன்முகம் கொண்டவர் பாமயன்!. தமிழகத்தின் தற்போதை விவசாயச் சூழல்கள் குறித்தும், சமீபத்திய மூன்று  வேளாண்மைச் சட்டங்கள் குறித்தும்  பீட்டர்துரைராஜுக்கு அவர் தந்த நேர்காணல். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய  வேளாண்மைச் சட்டங்கள் குறித்து்?  மத்திய பாஜக அரசானது, அதிர்ச்சிகரமான வகையில், #  உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) #  விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தம், # பண்ணைச் சேவை ...

சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் ஐஸ்குச்சிக் கலைஞர் சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர்  ஐஸ்குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களைச் செய்து தன் வீட்டில் காட்சிப்படுத்தி வைத்துள்ளார். விமானம், ஊஞ்சல் ஆடும் மீன்கள், மோட்டார் சைக்கிள், படுக்கை அறை விளக்கு அலங்காரம் போன்றவற்றை தனக்கே உரித்தான பாணியில் தத்துரூபமாக அழகுற வடிவமைத்து உள்ளார். தான் நினைப்பதை அப்படியே ஐஸ் குச்சிகளால் காட்சிப் படுத்தும் ஆற்றல் கொண்டவர் இவர். போலியோ நோயால் இரு கால்களை இழந்து சக்கர நாற்காலியில் வலம் வந்த போதிலும் மனம் ...