மிக நீண்ட இழுபறியாக உள்ளது, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் இரட்டை இலை யாருக்குரியது என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. தேர்தல் ஆணையத்தின் இழுபறிக்கு பின் பாஜகவின் அரசியல் குயுக்தி பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கிட்டத்தட்ட அம்பலபடுத்திவிட்டது உயர்நிதிமன்றம்; இரட்டை இலையை தனக்குத் தான் என கேட்ட ஒ.பி.எஸ் கிட்டத்தட்ட ஒற்றை மரமாகி நிற்கிறார். 66 எம்.எல்.ஏக்களில் 62 பேர் இபிஎஸ் வசம் இருக்கிறார்கள். நிர்வாகிகளில் சுமார் 95 சதமானோர் இபிஎஸ் வசம் தான் உள்ளனர். இது சின்னஞ்சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ...

அரசியலில் எவ்வளவு அம்பலப்பட்டாலும், தலைமைகள் வீழ்வதில்லையே…? பொன்னையன் ஆடியோ விவகாரத்தில் எடப்பாடியின் யோக்கியதை கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. எடப்பாடியின் தலைமை தொடர்வதை கேள்வியாக்கியுள்ளது. எனினும், அறவுணர்வு இல்லாத சமூகத்தில், இதெல்லாம் என்னவாகும்? ”யார் இவர்? இது வரை மக்களுக்கு பெரிய அளவில் அறிமுகமில்லையே!” என ஐந்தாண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வரான போது அதிசயப்பட்டனர் மக்கள்! ஆனால், அந்த எடப்பாடி பழனிச்சாமி, யாருமே எதிர்பார்க்க முடியாதபடிக்கு தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்! அவர் முதல்வரானது கூட ஆச்சரியமானதல்ல, ஏனென்றால், அது சசிகலா அவருக்கு ஏற்படுத்தி ...