வாங்கிக் குவிக்கும் கடன்களுக்கு பின்னணியில் ஒரு சர்வ தேச அரசியல் சதி வலை உள்ளது. இதில் ஆளும் அல்லது ஆண்ட எல்லா அரசியல் கட்சி அரசுகளின் ஆட்சியாளர்களுக்கும் சுயநலம் உள்ளது. தற்சார்பான பொருளாதார பலத்தால் எந்த நாடும் தலை நிமிர்ந்துவிடக் கூடாது என்ற தவிப்பும் உள்ளது; ஒரு அரசாங்கம் வாங்கும் கடன்கள் பொது மக்களை பாதிக்குமா? பாதிக்காதா? ஒரு அரசாங்கம் தான் வாங்கும் கடன்களுக்கு வட்டி கட்டுகிறது. அந்த வட்டிக்கான பணத்தை தர கூடுதல் வரி விதித்தோ அல்லது மக்களுக்கான சில திட்டங்களின் முதலீட்டை ...










