அதிமுக ஆட்சி காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் தொடர்ந்து லஞ்சம், ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறது அறப்போர் இயக்கம். அதன் போராட்ட வியூகங்கள் குறித்தும், காவல்துறை நெருக்கடிகள் குறித்தும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுடன் பத்திரிகையாளர் ம.வி.ராசதுரை நடத்திய நேர்காணல்; லஞ்சம், ஊழலுக்கு எதிராக சமரசமில்லாமல் போராடி வரும்  “அறப்போர் இயக்கம்” கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கப்பட்டது.  அவர்களின் பத்தாண்டு கால சவால்மிக்க பயணத்தை இந்த உரையாடல் பதிவு செய்கிறது. சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பெயரை கிறிஷ்டி சப்ளைஸ் ...

”அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் 25 புகார்கள் அளித்திருந்தது. இந்த மூன்றாண்டுகளில் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதிமுக ஊழல்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளை பாதுகாக்கும் திமுக, தற்போது தானும் ஊழலில் திளைக்கிறது” -அறப்போர் ஜெயராமன்; ஊழலுக்கு எதிராக போராடி வரும் அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டில், அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அதானி நிறுவனமும் இணைந்து, நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததை அம்பலத்திற்கு கொண்டு வந்தது. 1.2 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை ...