அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்; பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது. அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, ...
இந்தியா – பாகிஸ்தான் இடையில் உண்மையிலேயே போர் ஆரம்பித்து விட்டது! திகில் தரும் போர் செய்திகளும், காட்சிப் பதிவுகளும் வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தின் சாட்சியாக நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன…! இதனால் இரு தரப்பிலும் ஏற்படும் இழப்புகள் சொல்லி மாளாது..; பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவை தாக்கிவிட்டு பாகிஸ்தான் பகுதிக்குள் பயங்கரவாதிகள் பாதுகாப்பு தேடிக் கொள்கிறார்கள் என்பதை இந்திய உளவுத் துறை அறிந்து வைத்திருந்த வகையில், தற்போது அவர்களின் ...