‘கம்யூனிஸ்டுகள் என்றால் போர் குணம் மிக்கவர்கள்’ என்ற அடிப்படைப் பண்பில் இருந்து அவர்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடை பெற்ற விதமும், மாநாட்டின் தீர்மானங்களும் பறை சாற்றுகின்றன. ‘திமுக விசுவாசம்’ தான் மிகவும் தூக்கலாக வெளிப்பட்டுள்ளது; கடந்த காலங்களில் பாதிக்கப்படும் எளிய மக்களின் பாதுகாவலனாக அறியப்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய திமுக அரசின் பாதுகாவலர்களாக தாங்கள் இருப்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு மாநாடு நடத்தியது போல உள்ளது. சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ...
எத்தனை தியாகங்கள், எவ்வளவு இழப்புகள், எவ்வளவு பெரும் ஆளுமைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை திரும்பி பார்த்தால் பெரும் பிரமிப்பே ஏற்படுகிறது. ஏழை, எளிய விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்க்கையில் கட்சி ஏற்படுத்திய தாக்கங்கள் அளவற்றவை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1925 டிசம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் கூடிய மாநாட்டில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் 99 வருடங்கள் கடந்த நெடிய பயணம் என்று சொன்னாலும் அதனுடைய வேர்கள் அதற்கு முன்பே தொடங்கிவிட்டது. ...













