சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்திய விவசாயத்தில் தொழிற்சாலைகளோ, தொழில் அதிபர்களோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்று தொழிற்சாலைகள் சாராமல் விவசாயமே இல்லை. அதுவும் அதானி, அம்பானி இல்லாமல் இன்றைய விவசாயமே இல்லை. இது போன்ற நிலை எப்படி உருவானது? இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஆயுத நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த அணு ஆயுதங்களை விவசாயத்திற்கான ரசாயன உரமாக மாற்றலாம் என்ற தொழில் நுட்பத்தை காண்கின்றனர். அதற்குப் பிறகு தான் மேற்கத்திய நிறுவனங்கள் கூலிப் படை விஞ்ஞானிகளை களத்தில் இறக்கி அதிக விளைச்சலுக்கு ரசாயன உரத்தை பசுமை ...