திமுகவின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர் இராம.அரங்கண்ணல். பெரியார், அண்ணாவிடம் குருகுலவாசம் செய்தவர். தனி மனித ஒழுக்கம்,  எதிரிகளையும் நண்பனாக்கிடும் சுபாவம், பொதுநலத் தொண்டு, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட அரங்கண்ணல் அரசியலிலும், சினிமாவிலும் சந்தித்த சவால்கள் சுவையானவை..!  சிறுவயதில் தீவிர காங்கிரஸ் பற்றாளராக இருந்த இராம.அரங்கண்ணல் தன் தமிழ் பற்றாலும், திருவாரூர் பள்ளித் தோழன் கருணாநிதியின் நட்பாலும் திராவிட இயக்கத்தின் பக்கம் நகர்கிறார். 15 வயதிலேயே அண்ணா, பெரியார் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. இடையில் அண்ணாமலை பல்கலை மாணவனாக இருந்த போது அந்தக் கால ...