‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்த நூல் வாழ்க்கையின் சகல கூறுகளையும் அலசுகிறது! இறையன்புவின் பரந்துபட்ட ஆழமான வாசிப்பு அனுபவங்களும், வாழ்வியல் பார்வைகளும் கைகோர்த்து நூலுக்கு அணி சேர்க்கின்றன! ஏராளமான புகைப்படங்கள், ஓவியங்கள் வண்ணத்துடன் அழகுற, தகுந்த இடங்களில் சேர்க்கப்பட்டு இருப்பது நூலுக்கு பொலிவைத் தருகின்றன! ‘இலக்கியங்கள் நடைமுறை சார்ந்த வாழ்க்கைக்கு தேவையில்லை’ என்ற அறியாமையை சுக்கு நூறாக்கிவிடுகிறது இந்த நூல்! ‘இலக்கியத்தின் வழியே நம் சிந்தனைகளையும்,செயல்பட்டையும், வாழ்க்கை குறித்த தெளிவையும் பெற முடியும்’ என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லி வியக்க வைக்கிறார் ஆசிரியர்! சுமார் 600 ...