உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் உரிய புரிதல் இன்றி பேசப் போக, விவகாரம் அரசியல்மயப் படுத்தப்பட்டு விட்டது. உயர் கல்வித் துறை என்பது உச்சகட்ட ஊழல் துறையாகி, பல்கலைக் கழகங்கள் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ள இந்தச் சூழலில், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன? ”தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் எங்களுக்கு கிடையாது. இதில் தமிழக முதல்வரின் கொள்கை முடிவின்படி செயல்படுவோம்.’’ என உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் எனப் பேசினார். அதன் பிறகு இது ...
கல்வித் துறையில் இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு! தலை சிறந்து விளங்கிய தமிழ்நாட்டை தலை குப்புற வீழ்த்தியே தீருவது என முடிவெடுத்து விட்டார்கள்! அதற்குத் தான் தற்போது செயல் வடிவம் தந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதாவது, வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் பள்ளி படிப்பு படித்த மாணவர்களில் 10 முதல் 15 சதவிகிதமானவர்களே உயர்கல்வி படிக்க வருகின்றனர். ஆனால், தமிழகத்திலோ சுமார் 70 சதவிகித மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். அவர்களுக்கு ...


















