கிரானைட் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை ஆட்சியாளர்கள் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்க காரணம் என்ன..? பி.ஆர்.பி குவாரிகளை சகாயம் மூடி இருக்காவிட்டால், மதுரை, தேனீ, திண்டுக்கல் மாவட்ட மலைகள் முழுவதும் எப்போதோ விழுங்கப்பட்டு இருக்கும். சகாயத்தின் எதிரிகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகி விட்டார்களா? மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, கிரானைட் குவாரி கொள்ளையர்கள் அழித்து சூறையாடிய  கண்மாய், குளங்கள், ஓடைகள், பாசன கால்வாய்கள், விவசாய நிலங்கள், ஊர்கள் குறித்த முழு விவரங்களையும்  நேரடியாக களம் கண்டு குறிப்பெடுத்தவர் சகாயம். அதை தமிழக ...