நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் என்.ஐ.ஏவைக் கொண்டு சில அரசியல் நகர்வுகளையும், சூழல்களையும் உருவாக்குகிறது பாஜக அரசு. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை, விசாரணை ! மீண்டும் கோவை கார் குண்டு வெடிப்புக்காக சோதனைகள், கைதுகள்.. ஆகியவற்றின் பின்னணியில் நடப்பது என்ன? கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இறந்தவர் ...