நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் என்.ஐ.ஏவைக் கொண்டு சில அரசியல் நகர்வுகளையும், சூழல்களையும் உருவாக்குகிறது பாஜக அரசு. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை, விசாரணை ! மீண்டும் கோவை கார் குண்டு வெடிப்புக்காக சோதனைகள், கைதுகள்.. ஆகியவற்றின் பின்னணியில் நடப்பது என்ன? கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இறந்தவர் ...
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டதன் நோக்கம் உண்மையில் நேர்மையான விசாரணை சார்ந்ததா? கடந்த காலங்களில் என்.ஐ.ஏ விசாரித்த வழக்குகளின் யோக்கியதை என்ன? இதன் பின்னுள்ள அரசியல் நோக்கங்கள் என்ன? கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு , தமிழகத்தின்அரசியல் தட்ப வெப்பத்தையும் சீர்குலைத்துள்ளது. பலரும் பல கோணங்களில் அனுமானங்களின் அடிப்படையில் கருத்து கூறி புழுதியை கிளப்பி வருகின்றனர் . தமிழக காவல்துறை விரைந்து செயல்பட்டு அவ்விபத்தில் இறந்தவரை அடையாளப்படுத்தி, அவரது கூட்டாளிகளாக கருதப்படுவோர் 5 பேரையும் கைது செய்து, இது பயங்கரவாத் ...