மலையாளப் படைப்புலகின் பெருமிதங்களில் எம்.டி.என்றழைக்கப்பட்ட எம்.டி.வாசுதேவன் நாயர் பிரதானமானவர். திரையுலக சூப்பர் ஸ்டார்களெல்லாம் இவர் எழுத்தில் பேசி நடிப்பதை கர்வமாக கருதினார்கள். சுமார் அரை நூற்றாண்டு மலையாளிகளின் சிந்தனைப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி; தமிழ்த் திரை உலகில் எழுத்தாளனுக்கு பெரிய மரியாதை கிடையாது. சுய மரியாதையைப் பேணும் எழுத்தாளன் இங்கே திரை உலகில் இருந்து சற்று விலகி நிற்கும் நிலையில் தான் உள்ளார்கள். ஆனால், மலையாளிகள் உன்னதமான படைப்பாளியை அடையாளம் கண்டுவிட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவதில் தன் நிகரற்றவர்கள்! அந்த வகையில் ...