இருக்கிற சட்டத்தில் என்ன குறை? நாம் வைக்கும் அடிப்படையான கேள்வி, சட்டங்களை கடுமையாக்கினால் போதுமா? சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர் பலவீனமாகவும், சுயநலமாகவும் இருந்தால் சட்டங்களால் என்ன பயன்? குற்றவாளிகளை தப்புவது சட்டத்தாலா? சட்டத்தை கையாளும் அதிகாரத்தில் உள்ளவர்களாலா? ”பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதிலும் தமிழக அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ...