சின்னஞ் சிறிய உருவம்! கவிதை சீற்றமோ எரிமலை வடிவம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் கவிதை வானில் ஒளிவீசித் திகழ்ந்த இந்த பெருங்கவிஞர் போதுமான அளவு கவனம் பெறவில்லை. அவரது சமரசமற்ற குணங்கள் அவரை எந்த இயக்கத்திற்குள்ளும் கட்டுண்டு இருக்கவிடவில்லை. கவிஞரை பற்றிய ஒரு பார்வை; எளிய சொற்களில்  ஒரு எரிமலையின் வெப்பத்தை கடத்தும் ஆற்றல் பெற்ற கவிஞரும், ஒரு ஆற்றின் கரையோரம் பிறந்தவர் தான். அதனால் ஆறும் நீரும் நிலமும் வாழ்வும் பற்றி நிறைய அறிந்தவர். “காவிரியை கடக்க  ஓடம் தேவையில்லை .இனி  ஒட்டகம் ...