”காவிரி நீர் கேட்டு கர்நாடகம் சென்று தமிழக முதல்வர் விஜய் பேசக் கூடாது” என்ற குரல்கள் வலுக்கின்றன. இந்த அவ நம்பிக்கை குரல்களை முதல்வர் விஜய் அலட்சியப்படுத்தி, கண்டிப்பாக கர்நாடகம் செல்ல வேண்டும். ‘சட்டப் போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை’ என்ற படிப்பினையோடு, கடந்த கால பகை அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து செய்ய வேண்டியது என்ன? காவிரி நீரை நம்பித் தான் தமிழகத்தின் வாழ்வாதாரம் இருக்கிறது. பேசுங்கள்! நேசத்திற்கான கதவுகளை மூடிவிட்டால், நியாயங்கள் கூட எடுபடாது! 50 ஆண்டுகளாக நீதிமன்றங்களை, நடுவர் மன்றங்களை ...
















