காங்கிரசில் 50 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்தும், கட்சிக்காக எந்த பங்களிப்பையும் செய்யாதவர் குலாம் நபி ஆசாத்! தொண்டுள்ளம் கொண்டவருமில்லை. தொண்டர் படையைக் கண்டவரும் இல்லை! பாஜகவின் தூண்டுதலால் இன்று காங்கிரசை பலவீனப்படுத்த களம் கண்டுள்ளார்! வெற்றி பெறுவாரா? காங்கிரஸ்காரர்களே பொறாமைப்படும் அளவிற்கு பல்வேறு பதவிகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர் குலாம் நபி ஆசாத் ! தற்போது அவர் “காங்கிரஸ் மீள முடியாத பின்னடைவு கண்டுவிட்டது ” எனவே நான் விலகுகிறேன் . காங்கிரசின் இந்த வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே காரணம் என்ற கடித குண்டை வீசியுள்ளார். ...