சிசேரியன் அதிகரிக்கிறது. சுகப் பிரசவம் குறைகிறது.. இதற்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம். அப்படி விவாதிக்கும் போது சிலர் குற்றவுணர்வால் குறுகிப் போக வேண்டியிருக்கும். பொதுவாக பெண்கள் சிசேரியனை விரும்புவதில்லை. அது அவள் மீது எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்; “20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால்< கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் பிரசவக் காலங்களின் போது அதிக வேலை செய்வார்கள். குடம் தூக்குவது ...