ஏப்ரல் 22 அன்று பெஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளிலும் பற்றிக் கொண்ட பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது..! ஒரு பெரும் யுத்தத்தை நிர்பந்தித்து தேச பக்த வெறியை உசுப்பிவிட நினைக்கும் போக்கு தெரிகிறதே…? சம்பவம் நடந்த இடத்திற்கு இராணுவத்தினரும், மத்திய பாதுகாப்பு படை (சி ஆர் பி எஃப்) மற்றும் காஷ்மீர் பிரதேச காவல்துறை வருமுன்னரே ஊடகங்கள் இதை பாக்கித்தானின் கைவரிசை என குறிப்பிட்டனர். இந்திய அரசும் ...