திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கள்ள மெளனமாக இருக்கலாம். ஆனால், உண்மைகள் உறங்குவதில்லை. திமுகவின் பாஜக எதிர்ப்பு என்ற பாசாங்கு அரசியல் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது. கொள்கை கூட்டணியில் இருந்து அது குபேர கூட்டணி நோக்கி நகர்ந்துவிட்டது; தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என இறுமாந்திருந்த திமுகவால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும். ”மக்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர்” ”சினிமா கவர்ச்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டனர்” ”வோட்டிங் மெஷினில் கோல்மால் செய்து தவெகவை, பாஜக ஜெயிக்க ...

சிவாஜி, கமலை விட சிலிர்க்க வைக்கும் நடிப்பாற்றல் கொண்டவர்கள் அரசியல் அரங்கில் அதிகமாகவே உள்ளனர். இது நடிப்பு என்பதே ஒருபோதும் வெளிப்படாமல், கொள்கைவாதியாக சதா சர்வ காலமும் அரசியல் அரங்கில் வலம் வர முடிவது என்பது அபார சாதனையாகும்! ஆனால், உண்மை ஒரு நாள் வெளியாகும்! அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்! இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரம் அவர்கள் சொல்வதில் உடன்படுகிறேன். ‘’பாஜக அரவணைத்துள்ள அதிமுக நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது’’ ஆம், உண்மை தான்! அதிமுக சுதாரித்துக் கொள்ளாவிட்டால், அதனை பாஜக விழுங்கிவிடும் என்பதே ...

”திமுகவை ஒழித்துக் கட்டுவதே எங்கள் இலக்கு” என்று பாஜக சொல்கிறது! ”பாஜகவை ஒழித்துக் கட்டி தமிழகத்தை காப்பாற்றுவதே எங்கள் லட்சியம்” என்கிறது திமுக! உண்மையில் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் வாழ வைத்துக் கொள்ளவே இவ்விதம் பேசிக் கொண்டு இருக்கின்றனர். இந்தக் கருத்து பலருக்கு முட்டாள் தனமாகத் தெரியும். ஆனால், இதுவே யதார்த்தம். ஒருவரை பற்றி அடிக்கடி பேசுவதன் மூலம் நீங்கள் அவருக்கு மிக முக்கியத்துவம் தருகிறீர்கள்..! அவரை மக்கள் மறந்துவிடாதபடிக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறீர்கள். அவர்களை எதிர்ப்பதால் தான் உங்கள் இருப்பு அர்த்தமாகிறது ...