1908 ல் அகில இந்தியாவையும் அதிர வைத்தது திருநெல்வேலி எழுச்சி! அப்போது ரஷ்யாவில் புரட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றவில்லை. ஆனால், தூத்துக்குடியில் மக்களைத் திரட்டித் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். திருநெல்வேலியும், தூத்துக்குடியும் தீக் கொழுந்துவிட்டு எரிந்தன! இதன் பின்புலத்தில் இருந்த தலைவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், மக்களின் ஆவேசத்தை நினைவு கூர்வோம்; இன்று திருநெல்வேலி எழுச்சி தினமாகப் பெருமிதத்துடன் நினைவுகூரப்படும் நாள். 116 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டவுடன் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் ...