திருப்பரங்குன்றம் மலை தற்போது ‘திகு திகு’ அரசியலாக மாற்றப்பட்டு வருகிறது! அறுபடை கோவில்களில் முதல் படையான இந்த முருகன் கோவிலை வைத்து இந்து மத உணர்வாளர்கள் படை திரட்டி வருகிறார்கள்! ”புனித மலை மீது புலால் உணவா..?” என்றும், ”இது புதில்லையே பல்லாண்டு பழக்கம் தானே” என்றும் வாதங்கள்..! தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலை நகரான மதுரை கலவரச் சூழலில் உள்ளது. இது வரை இல்லாத வகையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு என்றும், நாளையுமாக ( பிப்ரவரி -3,4) ...