தமிழக அரசை குறை கூறவும்,  சமூக நீதிக்கு எதிரான சனாதனக் கருத்தை திணிக்கவும் ஆளுநர் நடத்திய மாநாட்டில் 52 துணை வேந்தர்களில் 34 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் உறுதியான நிலைபாடு எடுக்க முடியாத தமிழக அரசால் உயர் கல்வித் துறையும், துணைவேந்தர்களும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது; ஆளுநர் தரப்பினரோ,  நாங்க திட்டமிட்டபடி நடத்தினோமா? இல்லையா? எங்களை உங்களால் தடுக்க முடியலையே..என்ன மாநில அரசு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் வரவில்லையே தவிர, தனியார் மற்றும் மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என 34 ...