வெள்ளை ஈ  மற்றும் வாடல் நோய் தாக்குதல் காரணமாக தமிழ் நாட்டில் தென்னை விவசாயிகள் தான்கொணாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து ஓராண்டாகவே பல்லாயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் இதனால் வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வரலாறு காணாத அளவி இள நீர் மற்றும் தேங்காய் விலைகள் அதிகரித்து வருகின்றது; தமிழக விவசாயிகளின் பிரதான தொழிலாக தென்னை வளர்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகம் என்று பார்க்கும் போது சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது! தமிழகத்தில் பரவலாக 29 மாவட்டங்களில் தென்னை ...