சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) என்பதாக தேர்தல் நடவடிக்கைகளில் பல சீரழிவுச் செயல்பாடுகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பீகாரில் பீதியை கிளப்பிய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நகர்வையும், நீதிமன்றத்தையே நிராகரிக்கத் துணிந்த அதன் சர்வாதிகார போக்குகளையும் குறித்த ஒரு அலசல்; பத்து ஆண்டுகளாக ஒரு பொய் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது –  பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக வந்த  இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு தேர்தலில் வாக்களித்து, பாஜகவின் எதிரிகளை வெற்றி பெற செய்கிறார்கள்” – என்பதே அந்தப் பிரச்சாரம். ...

எந்தக் குற்றச்சாட்டையும் பொருட்படுத்தாமல் – அனைத்து அட்டூழியங்களையும் தொடர்கிறது தேர்தல் ஆணையம். உயிராக போற்ற வேண்டிய ஜனநாயக மாண்புகளை, மயிராக கருதி செயல்படும் தேர்தல் ஆணையம், பீகாரைக் கடந்து அடுத்து தமிழகத்திலும் தகிடுதத்தங்களை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது! இதற்கு உச்ச நீதிமன்றம் பச்சை கொடி காட்டுவதா? பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் “ சட்டத்திற்கு புறம்பான” வை என அறிவிக்க கூறி ADR ( Association for Democratic Reforms) அமைப்பும், அரசியல் கட்சி தலைவர்களும் ( ...

மிக நீண்ட இழுபறியாக உள்ளது, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் இரட்டை இலை யாருக்குரியது என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. தேர்தல் ஆணையத்தின் இழுபறிக்கு பின் பாஜகவின் அரசியல் குயுக்தி பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கிட்டத்தட்ட அம்பலபடுத்திவிட்டது உயர்நிதிமன்றம்; இரட்டை இலையை தனக்குத் தான் என கேட்ட ஒ.பி.எஸ் கிட்டத்தட்ட ஒற்றை மரமாகி நிற்கிறார். 66 எம்.எல்.ஏக்களில் 62 பேர் இபிஎஸ் வசம் இருக்கிறார்கள். நிர்வாகிகளில் சுமார் 95 சதமானோர் இபிஎஸ் வசம் தான் உள்ளனர். இது சின்னஞ்சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ...

வாக்காளர்கள் சரிபார்ப்பு, திருத்தம் என்பதாக சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களை தகுதியற்றவர்களாக்குவது, சிறுபான்மையினரை, ”நீ இந்தியக் குடிமகனே கிடையாது” என அகதியாக்குவது என்ற நோக்கங்களுடன் இந்திய தேர்தல் ஆணையமே செயல்பட முடியுமா..?  இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க இருக்கிறது. நாட்டு நடப்பை நன்கு உணர்ந்தவர்கள் இந்த தேர்தல் நிதிஷ் குமார் தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணிக்கு – பாஜ க கூட்டணிக்கு- சிம்ம சொப்பனமாக இருந்து வருவது தெரியும். ஹரியானாவிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் ...

வாக்கு எண்ணிக்கையை சொல்லுவதில் குளறுபடி! வன்முறையை தூண்டிவிடும் மோடியை கண்டிக்க பயம், எதிர்கட்சிகளை மிரட்டி பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி..என இந்திய வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையம், தேறாத ஆணையமாக காட்சியளிக்கிறது. ‘பத்துமுறை கூட பிரதமராவேன்..’ என கதையளக்கும் மோடி..! முதல் நான்கு கட்ட வாக்கு பதிவுகளில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த தேர்தல்களின் வாக்காளர்கள் எத்தனை பேர்?, எத்தனை பேர் வாக்கு அளித்தார்கள்? என்ற எண்ணிக்கையை வெளியிடாமல் வாக்கு சதவிகிதத்தை கூட்டியும், மாற்றியும் குளறுபடி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய மூடு ...