நீதிமன்றம் ஒன்றே நம் அரசியல் பிரச்சினை, சமூக பிரச்சினை, குடும்ப சச்சரவுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு என்பது ஆரோக்கியமற்ற சூழலின் அடையாளமாகும். நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து வந்துதித்த தேவ தூதர்களா…? இப்ப எல்லாம் நீதிமன்றங்களை நாம் அதிகம் நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தவறிழைக்கும் போது, அதிகார மையங்களின் அழுத்தங்கள் தலை தூக்கும் போது, காவல்துறை செயல்பட மறுக்கும் போது, அரசு நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி அழிச்சாட்டியம் செய்யும் போது.., என இப்படி பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும். ...
அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்! ‘எளிய, கடைக்கோடி மனிதனுக்கு நீதி மறுக்கபடக் கூடாது’ என்பதில் ஆர்வம் காட்டுவார்! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்! அம்பேத்கார் சட்டப் பணிகள் சங்கம் என்றும் பவுத்த பொதுவுடமை இயக்கம் எனவும் இயங்கி வருகிறார்! நேற்றைய தினம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் பொது நலன் சார்ந்து செயல்படும் முக்கியமான வழக்கறிஞர்கள் பலர் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி, புரட்சியாளர் பகத்சிங் ஆகிய இருவரையும் மையப்படுத்தி நினைவுகூறும் விதமாக ஒரு ...














