விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசின் தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் விவசாய அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் போர் முழக்கம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த அநீதியை தமிழக அரசு கச்சிதமாக மத்திய பாஜக அரசின் உத்தரவுக்கு இணங்க செய்து கொண்டுள்ளது; மத்திய பாஜக அரசின் விவசாயக் கொள்கையை எதிர்ப்பதாக திமுக தொடர்ந்து சொல்கிறது. ஆனால், தற்போது தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதலை தனியார் கைகளுக்கு மாற்றும் காரியத்தை செய்கிறது. விவசாயத்திற்கான ...
தமிழக நெல் கொள் முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. எந்த நேரம் மழை வந்தாலும் இவை அதோ கதியாகும் அவல நிலையில் உள்ளன. ஒரு மாதமாக தொடரும் கொந்தளிப்பு சூழலும், விவசாயிகள், மற்றும் நெல் கொள்முதல் பணியாளர்களின் கதறல்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்டவில்லையோ..! விவசாயம் என்பது தான் இருப்பதிலேயே சவாலான தொழிலாகும். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி படை எடுப்புகள் இத்தனையையும் எதிர் கொண்டு தான் விவசாயம் நடக்கின்றது. கடனை வாங்கியோ, அடகு ...
வெயில், மழை பாராமல் நாளும், பொழுதும் பாடுபட்டு பயிர் விளைவித்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கே இந்தப் பாடுபடுத்த வேண்டுமா? லஞ்சமின்றி நேர்மையான கொள்முதல் சாத்தியமே இல்லையா? தற்கொலைக்கு தள்ளும் அளவுக்கு மன உளைச்சல் தருவதா? நம்மை பசியாற வைக்கும் விவசாயிகளை விவசாயத்தைவிட்டே வெளியேறச் செய்யும் அளவுக்கு நெல்கொள் முதல் நிலையங்கள் பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளை நடத்துவதை ஆட்சியாளர்களால் ஏன் தடுக்க முடியவில்லை…? மிகச் சமீபத்தில் கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் குமார் ...















