ஜெயலலிதாவின் சிகிச்சையிலும், மரணத்திலுமான சந்தேகங்கள் இன்னும் தொடர்கின்றன. அதற்கான ஆறுமுகசாமி கமிஷன் அப்போலோவையும், சசிகலாவையும் குற்றம் சாட்டியது. ஆனால், கமிஷனின் விசாரணையில் வெளியான தகவல்களோ ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் பாஜக அரசுக்கும் பங்கிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது; உடல் நலக்குறைவால் ஜெயலலிதா செப்டம்பர் – 22,.2016 இரவு 10:30 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் பலனின்றி டிசம்பர் -5, 2016 இரவு 11:30 மணிக்கு மரணம் அடைந்தார். ஆறுமுகசாமி ஆணையம் தனது இறுதி அறிக்கையில், ”சசிகலாவும், அப்போலோ மருத்துவமனையும் இணைந்து ...
”சாதியால் தான் நாடு பின்னடைந்துவிட்டது…, சாதியே கிடையாது..” என பாஜக தலைவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்! ஆனால், அக் கட்சிக்குள்ளும், ஆட்சி நிர்வாக கட்டமைப்பிலும் பார்ப்பனர்களின் முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது! பார்ப்பனர்கள் ஏன் பாஜகவை கொண்டாடுகிறார்கள்..? எனப் பார்ப்போம்; நமது பிரதமர் மோடியோ, ”நாட்டில் இரண்டே சாதிகள் தான் உள்ளனர். ஒன்று ஏழைகள் மற்றொன்று நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க பங்களிப்பவர்கள்” என்கிறார்! அதாவது இரண்டாவது தரப்பினர் வசதியானவர்கள் என்பதை தவிர்த்து நாட்டை வறுமையில் இருந்து மீட்க பங்களிப்பவர்கள் என்பதன் மூலம் ஏழைகளை நாட்டிற்கு பங்களிக்காதவர்கள் ...
பாஜக எப்படி ஒரு பலமான இயக்கமாக மேலெழுந்து வந்தது? இதன் பின்னணியில் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் எப்படி அடித்தளமாக இயங்கி கொண்டுள்ளது.. என்பதை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வெற்றி சாத்தியமில்லை. எத்தனை திட்டமிடல்கள்! எவ்வளவு செயல்பாடுகள்..!வாவ்! பாஜக என்ற அரசியல் கட்சி அடிப்படையில் பலவீனமானது! ஆனால், அதற்கு அடித்தளமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற சித்தாந்த அமைப்பு மிக வலுவானது. இதில் பயிற்சி பெற்றவர்கள் தாம், பாஜகவில் தலைமை பொறுப்புக்கு பெரும்பாலும் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் அரசியல் செயல் திட்டமாகவே பாஜக ...
வன்மம், வெறுப்பு, துவேஷம்..ஆகியவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலமே தங்கள் சாம்ராஜ்யத்தை கட்டமைக்கிறது பாஜக என்பதை கள ஆய்வு செய்து ஆதாரங்களுடன் எழுதியுள்ளது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்! கர்நாடகத் தேர்தல் களத்தை, நேரில் பார்வையிடச் சென்ற வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர்கள், களத்தில் பல வாரங்களைச் செலவிட்டார்கள். அப்போது, செய்தி அனுப்பும் மிகப் பெரும் இயந்திரங்களையும், அதை இயக்கும் மனிதர்களையும், அவர்கள் சந்தித்தனர். அவர்கள் அளித்த நேர்காணல்கள் மூலம் பா. ஜ. கவும், அதன் நட்பு இயக்கங்களும் எவ்வாறு பெரும்பான்மை ...
தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளை சற்றுக் கூடுதலாகவும், விவரமாகவும் பேசி கருத்தை கவருபவர் சீமான்! திமுகவும், அதிமுகவும் நீர்த்துப் போய், அம்பலமான நிலையில், மக்கள் புதிய ஒரு அரசியல் கட்சியை எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பிற்கு தக்கவராக சீமான் தோற்றம் காட்டுகிறார்! ஆனால், அவர் நம்பகத்தன்மையானவரா? தன்னை ஒரு சாதியவாதியாகவும், ஆர்.எஸ்.எஸ்காரனாகவும் வெளிப்படுத்திக் கொண்டு, பாஜகவின் வளர்ச்சியே தன் ஊடகச் செயல்பாட்டின் அடித்தளம் என்று எப்போதும் பொய், புரட்டுகள் பேசி பிழைப்பு நடத்தும் ரங்கராஜ் பாண்டே, ”ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுகவை ...
கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...





















