வேலியே பயிரை மேய்ந்த கதையாக முதலமைச்சரே மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டு, ஒரு தரப்பை ஆதரித்து, கிறிஸ்த்துவ பழங்குடிகளான குக்கி இன மக்களை கூண்டோடு கருவறுக்க காய் நகர்த்தியது துல்லியமாக அம்பலப்பட்ட  நிலையில், பாஜக தலைமை பிரேன் சிங்கை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா…? அறுநூற்று ஐம்பது நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் சமூகத்தின் இரு பெரும்பிரிவுகளான மெய்தீ மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இன மோதலும் வன்முறையும் வெடித்து உச்சத்தை தொட்ட பொழுது , பதவியிலிருந்து விலகாத முதல்வர் என். பிரேந்திர சிங்  அமீத் ...

”மணிப்பூர் கலவரத்தை உருவாக்கி, நான் தான் குக்கி பழங்குடிகளின் குடியிருப்புகளில் குண்டு வீசச் சொன்னேன். ..”என பெருமையாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசிய ஆடியோ டேப் அம்பலமாகியுள்ளது. ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஆடியோ டேப் முழு விவரங்களும், அதன் பின்னணியும்; கடந்த ஆண்டு (2023) மே மாதம் வெடித்துக் கிளம்பிய மணிப்பூர் வகுப்புக் கலவரம் இந்திய நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. மணிப்பூர் பள்ளத்தாக்குகளை உறைவிடமாக கொண்ட மெய்தீ இன மக்களுக்கும் , மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் குக்கி-ஜோ இன ...