சுமார் 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் இடை நிலை ஆசிரியர்கள்!  இப்போதும் அவர்கள் போராட்டம் இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆரம்ப கல்வி என்பது அடிப்படையானது! ஆனால், அந்த ஆரம்ப பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் தமிழக அரசு படு அவல நிலையில் வைத்துள்ளதால் தான் இந்தப் போராட்டங்கள்; தற்போது பதினைந்து நாட்களாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.‌ தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. அவர்களது  கற்றல் இழப்புகளை எப்படி ஈடு செய்ய போகிறோம்? தமிழ்நாட்டின் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவிர்க்க இயலாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

அனைவர் உள்ளத்தையும் உலுக்கி எடுத்துவிட்டது இந்த பழங்குடியின் மரணம்! சாதிச் சான்றிதழுக்காக 5 ஆண்டுகள் அலைந்த நிலையில் தன்னைத்தானே தீயிட்டு எரித்துக் கொண்டார் மலைக்குறவரான வேல்முருகன். தமிழகம் முழுக்க பல்லாயிரம் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவது சவாலாகவே தொடர்வது ஏன்? காஞ்சி மாவட்ட படப்பை மலைக்குறவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து, ”எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் அரசு அலுவகத்திற்கு பலமுறை அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே தீக்குளித்து ...

உணவை எடுத்துக் கொண்டு பறக்கிறார்கள்! பதட்டத்துடன் ஓடி டெலிவரி செய்கிறார்கள்! அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள்? இயற்கை உபாதைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள்? தினமும் 12 மணி நேரம் சாலையிலேயே வாழ்க்கை கழிகிறது! ஸ்விக்கி, ஓலோ, உபர், ஜொமட்டோ.. எல்லாமே உழைப்பு சுரண்டாலாக உள்ளது! இப்படி ஓடி,ஓடி உழைப்பவர்கள் அடிமாட்டுச் சம்பளத்திற்காக உழைத்து, ஆறேழு வருடங்களில் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள்! இந்திய ஒன்றிய அரசு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா சட்டங்களில் இருந்தும் விதிவிலக்கு அளித்திருக்கிறது, பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி, தொழிலாளர் ...

மா.சுப்பிரமணியம் நல்லவர். ஆனால், அவர் கட்டுப்பாட்டில் தான் சுகாதாரத் துறை உள்ளதா..? என சந்தேகப்படும் அளவுக்கு ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது! வரலாறு காணாத மன உளைச்சலை சந்தித்துள்ள அரசு மருத்துவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவித்து உள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவர்களுக்கான ஒரே புகலிடம் அரசு மருத்துவமனை தான்! ஆனால். அங்குள்ள அதிகாரிகளுக்கோ இது பணம் பார்க்கும் அமுத சுரபி!எதற்கெடுத்தாலும் காசு,பணம், துட்டு என மருத்துவத் துறை அதிகாரிகள் சுகாதாரத் துறையை சூறையாடி வருகிறார்கள்!  இதை நினைத்தால் வேதனையாக உள்ளது. ...

தேசமே தீப்பிடித்து எரிகிறது! அக்னிபாத் என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பாஜக ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு ராணுவத்திற்கு வரும் வீர்களை அத்துக் கூலிகளாக நடத்துவோம்” என்கிறார்கள்! பீகாரில் தொடங்கி உ.பி.ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , இமாச்சசல் பிரதேசம் ,தெலுங்கானா என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஏராளமான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, வன்முறையும், போலீஸ் தடியடியும் தொடர்கிறது. காரணம், ...

மருத்துவக் கல்வியையே மரணிக்க செய்து கொண்டுள்ளது பாஜக அரசு! காலதாமதமான நீட் தேர்வு, இன்னும் கவுன்சிலிங் நடத்த முடியாத நிலைமை! 83,000 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், 45,000 பி.ஜி மாணவர்களும் கல்லூரிக்குள் கால் வைக்க முடியாத அவலம்! ஏன் இந்த நிலைமை? நீட் எக்ஸாம் குளறுபடிகளால் நாளும்,பொழுதும் பாதிக்கப்படும் மாணவர்கள் கோர்ட் வாசலை மிதித்த வண்ணம் உள்ளனர் என்றால், மாநில அரசுகள் நடத்தி வந்த மருத்துவ தேர்வுகளை மத்திய அரசு தான் நடத்த முடியும் என்பதாக மையப்படுத்திவிட்டதால் நீட் எக்ஸாமே குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாமல் ...