மடாதிபதிகளெல்லாம் துறவிகளாம்..! அனைத்தையும் துறந்ததாகக் கூறி காவி, கமண்டலத்துடன், ருத்திராட்சிர மாலை அணிந்து, அனைத்தையும் துய்த்து இன்புறுகிறார் சிலர்! நாட்டு நலனுக்காக அநீதிகளை எதிர்த்து, ஆதிக்க சக்திகளை, அதிகார மையங்களை எதிர்த்து, உயிரையே துறக்கிறார் சிலர்! எது உண்மையான துறவு; தங்கள் குடும்பம், உற்றார், உறவினர்கள், சொத்து, சுகம் அனைத்தையும் ‘துறந்த பின்னரே’ஒருவர் மத பீடங்களான மடங்களின் ‘மடாதிபதிகளாக’ பொறுப்பேற்கிறார் என்பதே பிரபல ஊடகங்களின் வழியே பொது வெளியில் கட்டமைக்கப்பட்ட  ஒரு கருத்து! இது உண்மையா? இந்து மதங்களின் மடங்கள் மட்டுமல்ல . . ...