மகாத்மா காந்தி எப்போதுமே இவர்களுக்கு சிம்ம சொப்பனம் தான்! உயிரோடு இருக்கும் போதும் ஓயாது எதிர்த்தார்கள்! பல முறை கொலை செய்ய முயன்று தான், இறுதியில் முடித்தார்கள்! சங்கிகள் ராமருக்கு சனாதன விசேம் போட்டனர், காந்தியோ சாந்த சொருபியாக மாற்றினார்! சங்கிகள் ராமரை பார்ப்பனர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்ட சத்திரியனாக காண்பித்தார்கள், காந்தியோ கடையனுக்கும் கருணை காட்டும் கருணாமூர்த்தியாக மாற்றினார்! சங்கிகள் ராமரை சூத்திரர்களை கொல்லும் ஆக்ரோச வீரராக்கினார்கள், காந்தியோ ராமரை அகிம்ஷா மூர்த்தியாக மக்கள் மனங்களில் விதைத்தார்! பொய்யான ஆன்மீகத்திற்கு மாற்றான காந்தியின் மெய்யான ...
சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் காந்தியடிகள்! அவர் வாழ்க்கையே நமக்கான செய்தி தான்! அந்த வகையில் பல்வேறு சம்பவங்களில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார், பகைவர்களை வென்றெடுத்தார் என்பது இன்றைக்கும் நமது சமூக, அரசியல் வாழ்வுக்கான பாடமாகும்! மனிதர்கள் சமய நம்பிக்கை, பேசும் மொழி, சார்ந்திருக்கும் இனம், ஏற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், சமூக பழக்கவழக்கங்கள், தேசம் கலாச்சாரம், போன்றவற்றின் அடிப்படையில் தனித்தும் குழுக்களாகவும், பிரிந்து கிடக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் தன்னுடையது சிறந்தது என்று எண்ணும் வரை கூட பிரச்சினை இல்லை, ...
















