மணல் கடத்தலை தடுத்த சூசைபாண்டியாபுரம் வி.ஏ.ஓ.  லுார்து பிரான்சிஸ், கரூர் குப்பம் விவசாயி ஜெகநாதன், சமூக செயற்பாட்டாளர் மணி கொலை செய்யப்பட்டனர். எத்தனையோ பேர் அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளனர். கடைசியாக ஜெகபர் அலி கொல்லப்பட்டார். இத்தகு கொலைகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் என்ன தொடர்பு? மணல் மாபியாக்களுக்கு எதிராகப் போராடி, அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி அவர்கள் ஜனவரி 17, 2025 மண் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொன்றவர்கள் திட்டமிட்டு கெட்ச் போட்டு செய்துள்ளனர். முன்னதாக வீடு சென்று அவரை ...

ராட்சத மணல் கொள்ளைகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன! நீர்வளத் துறை அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் பொருந்தாதவராக நீர் வற்றும் வாய்ப்புகளை நாளும், பொழுதும் ஆராய்ந்து, மணல் கொள்ளையில் மலைக்க வைக்கும் சாதனை நிகழ்த்துகிறார் துரைமுருகன்! திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஆண்டு அக்டோபரில் புதிதாக 15 மணல்குவாரிகளை ஏற்படுத்தினார் துரைமுருகன். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 41 மணல் குவாரிகள் செயல்படுகின்றன! 21 மணல் குவாரிகள் லாரிகள் மூலமாகவும், 30 மணல் குவாரிகள் மாட்டு வண்டி மூலமாகவும் மணல் அள்ளப்பட்டு வருகின்றன! ...