இதென்ன இப்படி சொல்கிறாய்? அவங்க பட்ஜெட்டில் வடிகிற தேனை எடுத்துப் பருகி ஊடகங்கள் எல்லாம் பரவசப்படுகையில், நீ மட்டும் சூது,வாது, சூட்சுமங்கிறாயே.. என்கிறீர்களா? பட்ஜெட்டில் உள்ள எழுத்துக்களை வாசித்து முடிவெடுப்பது அறிவுடமையா? இதோ, பொய்களையும், புளுகளையும் வரிசைப்படுத்திப் பார்ப்போமா? வார்த்தை ஜாலங்கள், வகை,வகையான பொய்களைக் கொண்டு ஒரு பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவதில் நிர்மலா சீதாராமன் நிகரற்றவர் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ”இந்த பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும், அதன் உள் நோக்கங்களும் இந்திய மக்களின் முதல் எதிரியே அதன் அரசாங்கம் தான்” என அறைந்து ...












