எந்த ஒரு நல்ல விஷயமும் மக்களிடையே வரவேற்பு பெற்று காலூன்றும் போது பேராசைக்காரர்கள் அதை வேகமாக ஆக்கிரமித்து, செய்யக் கூடாதவற்றை செய்து மக்களை குழப்பி விடுகிறார்கள்! இங்கே மலர் மருத்துவத்தின் பெயரால் செய்யப்படும் அலப்பரைகள், மூடத்தனங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறார் மருத்துவர் துர்காதேவி; மலர் மருத்துவத்தின் தாயகம் இங்கிலாந்து. மலர் மருத்துவத்தைப் பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் முதல் முதலில் இவ்வுலகிற்கு கண்டுபிடித்து அறிவித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் எட்வர்ட் பேட்ச் அவர்கள் தான்! மலர் மருத்துவம் என்பது மனிதர்களோட மனதிற்கான மருத்துவம். என்பதையும், இதை ...













