அதிக செலவில்லாமல் எளிமையாக படம் எடுக்கிறார்கள்! சாமானிய மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை சமரசமின்றி அலசுகிறார்கள்! மென்மையான காதலை தென்றலாய் வீச விடுகிறார்கள்! கதாபாத்திரங்களை கச்சிதமாக வடிவமைக்கிறார்கள்! மலையாள சினிமாக்கள் மலைக்க வைக்கின்றன! மலையாளத்தில் ஹோம், ஜோ அண்ட் ஜோ, படங்களைத் தொடர்ந்து வெளியாகி இருக்கும் எளிய சினிமா “நா தான் கேஸ் கொடு”.  குஞ்சாக்கா போபன் இணைந்து தயாரித்து கதை நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்தீஷ் எழுதி இயக்கி இருக்கிறார். ரதீஷ் ஏற்கனவே அண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற சினிமாவின் மூலம் கேரள திரையுலகத்திற்கு ...

கணவன், மனைவி இருவரும் வழக்கறிஞர்கள்! ஒரு பாலியல் வழக்கில் பெண்ணுக்கு கணவனும், ஆணுக்கு மனைவியும் ஆஜராகி வாதாடுகிறார்கள்! யார் வெற்றி பெறுகிறார்? இதனால், தொழில் முறையில் எதிர்ரெதிர் நிலையில் நிற்கும் இருவருக்குமான குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் என்னானது? நீதிமன்றத்தில் நடைபெறும் கதை என்று புரிதலுக்காகச் சொல்லலாம். இந்தப் படத்தில் எபினும், மாதவியும் திருமணமாகாத இளம் வழக்கறிஞர்கள். எபின், சுயேச்சையாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் போட நினைக்கையில் அவனுக்கு அரசாங்க வழக்கறிஞர் பதவி கிடைக்கிறது. டொவினோ தாமஸ், எபினாக நடித்துள்ளார். கணவன் குற்றவாளியாக ...