மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாய அரசியல் செய்கிறார்கள் தான்! ஆனால், இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் நடந்து கொள்ளும் விதம்  பல சந்தேகங்களுக்கு வலு சேர்க்கிறது. பல்கலை கழகத்தின் படுமோசமான நிதி நிலைமைகள் ஒருபுறமும், விடை தெரியாத கேள்விகள் பல மறுபுறமும் பிரச்சினையின் மூலத்தை மறக்கடிக்கிறது; கல்வி வளாகத்திற்குள்ளேயே அதில் படிக்கும் மாணவி வெளியாள் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளது பெரும் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது. இதில் 80 சதவிகித சி.சி.டிவி கேமரா வேலை செய்யவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது என்பதும் குற்றவாளி தொடர்ந்து ...