சுற்றுச் சூழலை சூறையாடும் தொழிற்சாலைகளை துவங்கிய பிறகு, சுற்றுச் சூழல் அனுமதியை முன் தேதியிட்டு வழங்கலாமாம்!  மக்கள் நலன், இயற்கை வளம் ஆகியவற்றை விடவும், பெரு நிறுவனங்களின் வர்த்தக நலன்களே பெரிது என மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், ஒரு சேர முடிவெடுத்துள்ளதன் பின்னணியை  குறித்த ஒரு அலசல்; நம் நாட்டில் ஏற்கனவே உள்ள சுற்றுச் சூழல் சட்டங்களை துச்சமாக மதித்து  நச்சுப் புகை மற்றும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலைகளையும், இயற்கையை அழித்து, நீர் நிலைகளை அபகரித்து, மக்கள் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் ...