இந்திய கல்வித் துறை வரலாற்றுக்கே களங்கமாக ஒரு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பிற்போக்குத் தனமான மூட நம்பிக்கை சார்ந்த பாடத் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்தி, கல்வித் துறையின் ஜனநாயக கட்டமைப்பை கருவறுக்கும் இந்த மசோதா குறித்த அலசல்; மத்திய அரசு உயர்கல்விக்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாம். அங்கனம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் ...