கொரோனாவுக்குப் பிறகு நம்மில் பலருக்கு புதிது புதிதாக நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. கொரோனா நோய் பாதித்தவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் உடல் நல பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி ஆண்மைக்குறை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம், வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகிறது. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் பலர் வியாபார நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறை பிரச்சினைக்காக மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சிகிச்சை பெற்றும்கூட தீர்வு கிடைக்காமல் பலர் விழிபிதுங்கி ...