முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கல்விச் சூழல் பேராபத்தில் உள்ளது! எளிய மக்களை கல்விப் புலத்திலிருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, சத்தமில்லாமல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தை தடுக்கும் விதமான AISEC- யின் கருத்தரங்கில் அனல் பறந்தது. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த தினத்தை ஒட்டி செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கணிசமான கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு எழுச்சியுடன் பேசினர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் ...