பாஜக அரசு கிரிப்டோ கரன்ஸியை அங்கீகரித்ததில் இருந்து நாடு முழுவதும் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன! பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக ஏமாறுகின்றனர்! கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்து, அபாரமான வட்டியாம்! காந்தப் படுக்கை, ஈமு கோழி மோசடிகள் வரிசையில் தற்போது கிரிப்டோ கரன்சி! நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில், சேமிப்பு கணக்கில்  வைத்தால் தற்பொழுது ஒரு லட்சம்  ரூபாய்க்கு மாதம் 550 ரூபாய் வட்டியாக வருகிறது. இது மிகக் குறைந்த தொகையாகத் தெரியும். வங்கி நம்மிடம்  இருந்து வாங்கிய பணத்தை 8 சதவிகிதத்திற்கு வீட்டுக் கடன், வாகன ...