தமிழகத்தின் தலை சிறந்த ஓவியராக ஜொலித்திருக்க வேண்டியவர் எப்படி தனக்குள் இருக்கும் நடிப்பு தாகத்தை கண்டறிகிறார், சினிமாவிற்குள் நுழைகிறார் என்பதையும், தன் சமகால சாதனை ஓவிய பிரம்மாக்கள் பலரையும் அறியத் தருகிறார்…! சிவகுமாரை நடிகனாக தமிழகம் நன்கறியும், சிறந்த சொற்பொழிவாளராகவும் தற்போது அறிந்து கொண்டுள்ளது! ஆனால், அடிப்படையில் அவர் ஒரு அற்புதமான ஓவியக் கலைஞர் என்பது மட்டுமல்ல, அதில் சாதனை படைத்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். ஆனால், இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் தன் சமகால ஓவியர்கள் குறித்தும், தனக்கு முந்தைய முன்னோடிகள் ...