அடடா, இதன் அருமை,பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா? இரண்டா? சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை மருத்துவத்தின் சிகரமாகும்! பெண்களின் முத்துப் பற்களைப் பார்க்கும் போது தும்பை பூ தான் கிராமத்து கவிஞனுக்கு நினைவில் வரும்! எம்.ஜி.ஆர் ஒரு படத்தில், ”தும்பை பூ போலே. துளசி செடி போலே பெண்ணைப் பாருங்க, மாப்பிள்ளை இணங்க..” எனப் பாடுவார்! சிவன் ...