வாகனம் எங்களுடையது. அதன் மெயிண்டன்ஸும் எங்களுடையது, உழைப்பும் எங்களுடையது. ஆனால், பலன்களோ ( ஓலா, உபர்) அவர்களுடையது! பாதிப்போ எங்களுடையது. இதை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க போகின்றன மத்திய மாநில அரசுகள்? என்று கேட்கும் – விரக்தியின் விளிம்பில் இருக்கும்  – வாகன ஓட்டிகள் பக்கம் அரசின் கவனம் திரும்புமா…? ஓலா உபர் நிறுவனங்களின் பகாசூரக் கொள்ளையை தெரிந்தும் தெரியாதது மாதிரி வேடிக்கை பார்க்கும் அரசின் அலட்சியத்தால் ஆயிரக்கணக்காக வாகன ஓட்டிகள் வீதி இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் அண்ணா ...

40 கோடி மக்களின் சேமிப்பை உள்ளடக்கிய மாபெரும் அரசு நிறுவனம் எல்.ஐ.சி! அபார லாபம், அனைத்து தரப்பின் நம்பிக்கை, அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பங்களிப்பு..என ஆல் போல தழைத்தோங்கி நிற்கும் எல்.ஐ.சியை பலவீனப்படுத்தி, சீர்குலைத்து, இந்தியாவை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வேட்டைக் காடாக்க மாற்ற முயற்சிக்கிறது பாஜக அரசு..! எல்.ஐ.சி.கைவிட்டுப் போவதை அனுமதித்தால் என்னென்ன கெடு விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்குகிறது இந்தக் கட்டுரை! எல்.ஐ.சி.என நாட்டு மக்களால் அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ,நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ...