உறுதிமிக்க விவசாயிகள் போராட்டத்தை கண்டு அரண்டு போயுள்ள அரசு, உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க திட்டமிடுகிறது. அதன் விளைவே நான்கு பேர் கமிட்டி. இந்த நான்கு பேர் வேறு யாருமல்ல, இந்த சட்டங்கள் உருவாக்கத்தின் பின்னணியில் செயல்பட்டவகளே..! கொலைகாரர்கள் கையில் அதிகாரபூர்வமாக கத்தியை தந்ததைப் போல விவசாயிகள் அழிவுக்காக திட்டமிட்டவர்களிடமே தீர்வையும் கேட்டுப் பெறுகிறது உச்ச நீதிமன்றம்! எட்டாவது சுற்று பேச்சு வார்த்தை அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே தோல்வி அடைந்த நிலையில் அடுத்த சுற்று பேச்சு வார்த்தை ஜனவரி 15 என்று அரசு ...
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் அனைத்து தரப்பு விவசாயிகளிடமும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.ஆகவே, தாங்களும் தாங்கள் வாழும் இடத்திலேயே டெல்லிவிவசாயிகளுக்கு ஆதரவாக எழுச்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.தற்போது தமிழகத்தில் அங்குமிங்குமாக சில விவசாய அமைப்புகள் போராடிவருகின்றன. எனினும் அதை வலுவாக பெரிய அளவில் ஒருங்கிணைத்து செய்ய தமிழக விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் கட்சி எல்லைகளைக் கடந்து நடந்தாலும், அந்தந்த கட்சியில் உள்ள விவசாயிகள் இதில் பெருந்திரளாக பங்கெடுத்து வருகின்றனர். பாஜகவைத் தவிர்த்த ...
இந்திய வரலாறு முன்பின் காணாத வகையில் விவசாயிகள் போராட்டம் தலை நகர் டெல்லியை உலுக்கிக் கொண்டுள்ளது! எந்த அரசியல் கட்சியையும் தங்கள் போராட்ட மேடையில் அனுமதிக்காமல் விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன் போராடி வருகின்றனர். கட்சி, சாதி, மதம், இனம், பணம், அந்தஸ்து, கெளரவம் என எதுவும் அவர்களை பிரிக்கவில்லை! குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பெயரால் மக்களை பிரித்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்த பாஜகவிற்கு விவசாயிகள் எந்த அடையாளங்களையும் பொருட்படுத்தாமல் ஒன்றுபட்டுள்ளது பேரதிர்ச்சியை தந்துள்ளது. அதனால்,பாஜகவும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தை ...
ஒய்வறியா உழைப்பு, நேர்மையான அரசியல்,வெளிப்படைத் தன்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டவர் கே.பாலகிருஷ்ணன்! யோகேந்திர யாதவ் தலைவராக இருக்கும் ’ஸ்வராஜ் இந்தியா’ (சுயஆட்சி இந்தியா) கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழகத் தலைவராகவும் உள்ளார்.அவரது நேர்காணல்! ’ஸ்வராஜ் இந்தியா’ கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தானே? ஆமாம், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது அதில் நான் ஆர்வமாக கலந்து கொண்டேன். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகிய மூவரும் சேர்ந்து அதன் ...