கற்பகத் தருவாக கருதப்பட்ட பனைமரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன! அடி முதல் நுனி வரை அற்புத பயன் தரும் நம் பாரம்பரிய பனையைக் காப்பதற்கு ஒரு போர்க்கால நடவடிக்கை தேவைப்படுகிறது. எட்டுகோடி பனை மரங்கள் இருந்த தமிழகத்தில் தற்போது சுமார் இரண்டரை கோடி பனைகள் தான் உள்ளன. இது இன்னும் பேரழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதன் அழிவுக்கு வித்திட்டவர் எம்ஜிஆர் தான்..தான் கட்டமைக்க விரும்பிய சாராய சாம்ராஜ்யத்திற்காக பனை வளத்திற்கு சாவுமணி அடித்தார்…இது குறித்து விரிவாகப் பார்ப்போம். சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள்,நாம் ...