இந்த அரசாங்கத்திற்கு இந்துக்கள் மீது கோபம் இருக்கிறது, துவேஷம் இருக்கிறது. அதனால், வெள்ளி,சனி, ஞாயிறு கோயில்களை பூட்டி வைக்கின்றனர் என்று நிச்சயமாக குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. தேர்தல் அறிக்கையிலும் சரி, பதவி ஏற்பிற்கு பின்பும் சரி இந்து அற நிலையத் துறைக்குத் தான் இந்த ஆட்சியாளர்கள் அதி முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்! எனில், கோயில்களை திறக்க எது உண்மையான தடை? இதன் பின்னணியில் இருப்பது யார் என பார்க்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க சமரசமின்றி அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அற ...